tamilnadu

img

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

 

தமிழகத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுவதாவது; வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர்,விழுப்புரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் எஞ்சிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். தமிழகம் மற்றும் புதுவை கடலோர பகுதி மற்றும் மன்னார் வளைகுடாவில் பலத்த காற்று வீசும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.